Sunday, October 30, 2016

குவைத் -- திருச்சி, திருச்சி -- குவைத் அபுதாபி வழியாக விமான சேவை..

குவைத்->அபுதாபி->(இதிகாத் ஏர்வேய்ஸ்)
அபுதாபி-திருச்சி->{ஜெட் ஏர்வேய்ஸ்)
திருச்சி->அபிதாபி->{ஜெட் ஏர்வேய்ஸ்)
அபுதாபி->குவைத்->{இதிகாத் ஏர்வேய்ஸ்}
வருகின்ற பிப்ரவரி-2017 முதல்,
இதிகாத் ஏர்வேய்ஸ்
ஜெட் ஏர்வேய்ஸ் சிறப்பு சேவை,
40-+7,கிலோ அனுமதியுடன்
தினசரி சேவையில்.

Kuwait to Abu Dhabi to Thiruchirapally to Abu Dhabi to Kuwait
Start at 01 Feb 17. Daily Flight
EY 304 KWIAUH 1620 1905
9W 215 AUHTRZ 2140 0310
9W 216 TRZAUH 0430 0720
EY 301 AUHKWI 0820 0905
Jet Airways in the first quarter of 2017 further expands service to Abu Dhabi, including new route launch from Thiruchirapally. Planned new flights as follow.

Thursday, October 27, 2016

வேலை வாய்ப்பு செய்திகள் | Job Opportunities


கத்தர் வேலை வாய்ப்பு

URGENT RECRUITMENT

AL WAKRAH TRANSPORTING COMPANY QATAR

Required : Heavy Vehicle / Trailer drivers with valid / expired Qatar Driving License

Salary : 1700 to 4000 +Trip allowance 25 +Accommodation provide by company

Qualification : SSLC Pass and ECNR Passport

Required Documents : Updated Resume, Licence copy, passport front and back copy, one photo

Contact : 09895382901, 09809202423, 09699008857

Email : Gulfjobs.co.in@gmail.com

Last Date : 05.11.2016

###$###$################

குவைத் வேலை வாய்ப்பு



கத்தார் வேலை வாய்ப்பு








Wednesday, October 26, 2016

இராக்கில் அமலுக்கு வர இருக்கும் மதுபான தடை!

ஈராக்கின் மசூல் நகரில் பயங்கரவாதிகளை வெளியேற்றுவது தொடர்பான போரில் அனைவரின் கவனமும் சென்று கொண்டிருக்கும் நேரத்தில்  ஈராக் நாடாளுமன்றத்தில் மதுவை தடை செய்வது தொடர்பான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மது உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கும் மசோதாவில் ஒரு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் போதிய ஆதரவு இருந்ததன் காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தடையை மீறி மது உற்பத்தி செய்தாலோ அல்லது இறக்குமதி செய்தாலோ ஒவ்வொரு முறையும் 10 முதல் 25 மில்லியன் தினார்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் மதுவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலிங் வசதி வந்து விட்டது

எல்லா மெசேஜிங் அப்ளிகேஷன்களைப் போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதைப் பயன்படுத்த வேண்டுமா??


மற்ற குறுந்தகவல் செயலிகளைப் போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ காலிங் அம்சம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் ஓர் ட்விஸ்ட்..
வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனர்களுக்கு வீடியோ கால் வசதியானது வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வாட்ஸ்ஆப் புதிய பதிப்பு v2.16.316 செயலியில் வீடியோ காலிங் அம்சத்தினைப் பயன்படுத்திப் பார்க்க முடியும். பீட்டா பதிப்பில் வீடியோ காலிங் சோதனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பட்டன்

அழைப்புகளை மேற்கொள்ளும் பட்டன் மூலம் புதிய வீடியோ காலிங் அம்சத்தினைப் பயனர்கள் அனுபவிக்க முடியும். டையலர் ஐகானினை அழுத்தும் போது வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.


பீட்டா

தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருவதால், வீடியோ கால் மேற்கொள்ள மறுமுனையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரும் பீட்டா பதிப்பினை பயன்படுத்துவது அவசியம் ஆகும்.

திரை

ஒருவேலை நீங்கள் வீடியோ கால் மேற்கொள்பவர் பழைய பதிப்பு வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது போனில் "Couldn't place call" என்ற வார்த்தை கேட்கும், மேலும் இதே தகவல் குறுந்தகவல் வடிவிலும் அனுப்பப்படும். இவ்வாறு தகவல் வரும் போது மறுமுனையில் ஆ பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

தகவல்

வாட்ஸ்ஆப் வீடியோ கால் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இயங்குவதாக இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் குறைவான இண்டர்நெட் வேகத்திலும் சீரான வீடியோ கால் அனுபவம் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.

வெளியீடு

தற்சமயம் சோதனை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடப்படும் தேதி குறித்து எவ்வித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை
Thanks :tamil.gizbot

Tuesday, October 25, 2016

Sunday, October 23, 2016

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

எதிர் கொள்வது எப்படி?
எச்சரிக்கை கட்டுரை!-------திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,(முன்னாள் காவல்துறை அதிகாரி)தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)சமீபத்தில் கல்கத்தாவில் அரியானாவைச் சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிலர் பிடிபட்டார்கள்.அப்போது அவர்கள் இந்தியாமுழுவதும் ஏழுமாநிலங்களில் இதுவரை 150 ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து வந்தவர்களிடம் கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பல லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாகவாக்கு மூலம் கொடுத்திருந்தார்கள்.சில மாதங்களுக்கு முன் சென்னையில் நந்தினி என்ற பெண் இரவு நேரத்தில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வந்த போது ஒரு கொள்ளையன் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச்சென்றான். இருசக்கர வாகனத்தில் கொள்ளையனை பிடிப்பதற்காக அந்தப் பெண் துரத்தி சென்ற போது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி அந்த பெண் இறந்து போனார்.எனவே இப்படிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளைகளை எதிர் கொள்வது எப்படி? என்ற விழிப்புணர்வை உங்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வெளியே வரும் சமயத்தில் ஏதாவது கொள்ளையர்கள் உங்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றால் அவனை எதிர்த்துப் போராடாமல் அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு முதலில் உங்கள் உயிரைக்காத்துக் கொள்வது தான் உங்களதுமுதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.காரணம் நீங்கள் இழக்கும் பணத்தை திரும்ப பெறுவதற்காக புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் வந்திருக்கின்றனஅதைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த இன்சூரன்ஸ் விதிகளின்படி நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுத்த பத்து நிமிடங்களுக்குள் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் அப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணம் 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு திருப்பி கிடைக்காத பட்சத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு முழுவதுமாக திருப்பிக் கொடுத்து விடும்.அதனால் இரவு நேரங்களில் நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது வீட்டிலிருந்து 10 நிமிட இடைவெளிக்குள் செல்லக் கூடிய ஒரு ஏ.டி.எம்மை தேர்ந்தெடுங்கள். காரணம் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து விட்டு நீங்கள் வீட்டிற்கு திரும்பிவரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உங்கள் பணம் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படலாம். எனவே உங்கள் இடத்திற்கும் ஏ.டி.எம்மிற்கும் பயண நேரம் பத்து நிமிடத்திற்குள்உள்ள ஒரு ஏ.டி.எம்மை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் பணம்கொள்ளையடிக்கப்பட்டால் கூட இன்சூரன்ஸ் மூலம் இழந்த பணத்தைஉங்களால் திரும்ப பெற முடியும்.அது மட்டுமல்ல பணத்தை எடுத்து வருபவர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தால் அதற்கு தனி இழப்பீடும் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவும் உங்களுக்கு இழப்பீடாக கிடைக்கும்.ஏற்கனவே நான் காவல் துறையில் இருந்த போது இன்னொரு வகையான ஏ.டி.எம் குற்றமும் நடந்திருக்கிறது. அதாவது ஏ.டி.எம்மிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தை கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்து விட்டு அந்த நபருடைய கார்டையும் மொபைல் போனையும் பறித்துக் கொண்டு அதனுடைய Pin Number ஐயும் கேட்டுத் தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் அந்த கார்டை உப யோகித்து மீண்டும் கணக்கிலுள்ள அத்தனை பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.நான் மேற்கூறிய இன்சூரன்ஸ் திட்டத்தின்படி உங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு உங்கள் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கொள்ளையர்கள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் மற்ற பணத்தையும் இன்சூரன்ஸ் உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும்.ஆனால் பணம் எடுத்த பத்து நிமிடத்திற்குள்மட்டுமே உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் தான் இன்சூரன்ஸ் உங்கள்பணத்தை திருப்பிக் கொடுக்கும் என்ற விதி இருப்பதால் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் நீங்கள் புகாரை பதிவுசெய்ய வேண்டும்.புகாரை பதிவு செய்வதில் பல பிரச்சனைகள் உண்டு. வங்கியின் Customer care க்கு நீங்கள் போன் செய்தால் அது எப்போதும் engaged ஆகவே இருக்கும். . எனவே பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் நீங்கள் உடனே 100 எண்ணிற்கு போன் செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். காரணம் நீங்கள் செய்யும் அத்தனை கால்களும் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் பதிவு(Record செய்யப்படும்) Police Control room ற்கு நீங்கள் செய்த call ஐ அத்தாட்சியாக பெற்று நீங்கள் எளிதில் இன்சூரன்ஸை பெற முடியும்.அடுத்து நீங்கள் இந்த ஏ.டி.எம் கொள்ளையைப் பற்றி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுத்த புகார் நகலும் இன்சூரன்ஸ் பெறுவதற்கு மிகவும் அவசியம். . ஆனால் இதில் தான் பிரச்சனையே இருக்கிறது.குற்றம் நடந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அது தங்கள் எல்லையிலேயே வராது என்று கூறி எல்லா காவல் நிலையங்களிலும் புகார்களை வாங்க மறுப்பார்கள்.எனவே தமிழ்நாடு காவல் துறை வலைத்தளத்தில் (Website) ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளை நடந்தவுடன்www.tnpolice.gov.inஎன்ற வலை தளத்தில் உங்கள் புகாரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யுங்கள். இந்தப் புகார் நகலை நீங்கள் இன்சூரன்ஸ் கம்பனிக்கு கொடுத்தாலே போதுமானது. சமீபத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் இறந்து போன அந்த பெண் இது போன்ற இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால் அந்த பெண்ணிற்கு அந்த மரணம் நேர்ந்திருக்காது. தான் இழந்த 19,000 ரூபாய் பணத்தை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தகொள்ளையனை துரத்தி சென்றதால் தான் அந்தப் பெண்ணின் உயிர் பறி போனது. இது போன்ற ஒரு இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால் அந்த பெண் பணத்தை மீட்பதற்காக தன் உயிரை இழந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் இது போன்ற இன்சூரன்ஸை உங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.இதே போல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்களுக்கு நான் கீழ்கண்ட அறிவுரைகளை கூற விரும்புகிறேன்.1. பொதுவாக இரவு நேரங்களில் பத்து மணிக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.2. பணம் மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் இரவு 10 மணிக்கு மேல் பணம் எடுக்கச் செல்லும் போது துணைக்கு ஒரு நபரையும் அழைத்து செல்லுங்கள்.3. இரவு பத்து மணிக்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில் மெயின் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய எல்லையில் இருக்கும் ஏ.டி.எம்மில் மட்டுமே பணத்தை எடுங்கள்.4.நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏ.டி.எம் உங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் பயண எல்லையில் உள்ளதாக இருக்க வேண்டும். காரணம் நீங்கள் பணம் எடுத்த பத்து நிமிடங்களுக்குள் கொள்ளை நடந்தால் மட்டுமே நீங்கள் இந்த இன்சூரன்ஸ் சலுகையை பெற முடியும்.5.ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்குமுன் உங்கள் சுற்றுப்புறத்தைநோட்டமிடுங்கள்.சந்தேகப்படக்கூடிய நபர்கள் ஏ.டி.எம் அருகே சுற்றிக் கொண்டிருந்தால் அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை தவித்து விடுங்கள்.6. கொள்ளையர்கள் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ காட்டி மிரட்டி பணத்தைக் கேட்டால் அவர்களை எதிர்த்துப் போராடவோ அல்லது அவர்களை துரத்திப் பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாம். காரணம் உங்கள் பணம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அமைதியாக செயல்படுங்கள்.உங்களுக்கு எந்த வங்கியில் ஏ.டி.எம். வங்கி கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியில் கேட்டு உங்கள் ஏ.டி.எம்மிற்க்கான கொள்ளையை ஈடு செய்யும் இன்சூரன்ஸை கேட்டு பதிவு செய்யுங்கள்..இது வரை நாம் பார்த்தது ஏ.டி.எம்மில் பணம்கொ எடுத்து வருபர்களிடம் கொள்ளையர்கள் நடத்தும் நேரடியான குற்றங்கள்.ஆனால் மறைமுகமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பல மோசடிகளை செய்து உங்கள் பணத்தை அபகரிக்கபல மோசடிகள் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன

Saturday, October 22, 2016

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!

ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தால், எத்தகைய தரமான இயந்திரமும் பழுதாகிவிடும். அப்படியிருக்க, தினமும் உடலாலும் மனதாலும் வேலைசெய்யும் மனிதனுக்கு ஓய்வு மிக அவசியம் அல்லவா? உடம்புக்கும் மனதுக்கும் பூரண ஓய்வு தருவதற்காக இயற்கை ஏற்படுத்திய ஒரு ஏற்பாடே தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதனின் உடல், மன ஆரோக்கியம் கெட்டுவிடும்.

ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் நமது தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருப்பதைக் காண்கிறோம். குறிப்பாக, ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இடையில் பலமுறை எழுவது, தூக்கத்தில் இருந்து விழித்த பின்னர் மீண்டும் தூக்கம் வர அதிக நேரம் பிடித்தல் என நிம்மதியான தூக்கம் என்பது கனவாகிவருகிறது. தூக்கத்துக்காகப் பலரும் தூக்க மாத்திரைகளை நாடுகிறார்கள். ஆனால், இந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் உயிருக்கே உலை வைத்துவிடும். தூங்கும் நேரம் மிக அதிகமானாலும் சரி! குறைந்துபோனாலும் சரி! பிரச்னைதான்!

இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாததற்குச் சில பழக்க வழக்கங்களும், உண்ணும் உணவுகளும்கூட காரணமாக இருக்கலாம். எனவே, நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால், சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். 




செய்ய வேண்டியவை...
* தூங்கச் செல்வதற்குக் குறைந்தது  ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.
* இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும்.
* தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
* மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பது போன்றவையும் தூக்கத்தை வரவழைக்கும்.
* தூங்குவதற்கு முன்னர், மன அமைதி கிடைக்க, உறவினர்கள் அல்லது  நண்பர்களுடன் ரிலாக்ஸாக அரட்டை அடிக்கலாம்.
* படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது.
* தூக்கத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
* இரவில் பசும்பால் குடிப்பது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து, ஒரு கப் அளவுக்கு சாப்பிடலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.


செய்யக் கூடாதவை...

* தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு முன் டீ, காபி, மது என எதையும் குடிக்கக் கூடாது.
* இரவுகளில் பயமூட்டும் த்ரில்லர் அல்லது பயங்கரமான ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்.
* தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகங்களைப் படிக்க வேண்டாம். ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால் மூளை சுறுசுறுப்பாகி விடும், இதனால் கூட தூக்கம் பாதிக்கும்.
* நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக்க கூடாது.
* நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள்.
* மதியம் மற்றும் மாலை நேரத் தூக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது இரவு தூக்கத்தை பாதிக்கும்.
* படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதோ,  டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது.
*  இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப் புத்தகத்தை ( e book) படிப்பதைத் தவிர்க்கலாம்.
* இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம், எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.





நன்றி : விகடன்..


singapore புதிய $50மி. விமான நிலைய முனையம்

சிலேத்தார் விமான நிலையத்தில் 2018 முடிவு வாக்கில் புதிய இரண்டுமாடி பயணிகள் முனை யம் கட்டப்படும். அது ஆண்டுக்கு 700,000 பயணிகளைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய முனையம் திறக்கப் பட்டதும் இப்போதைய முனையம் இடித்து தள்ளப்படும் என்று அந்தப் புதிய முனையத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சியில் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது. சிலேத்தார் விமான நிலை யத்தைப் புதுப்பிக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அந்தத் திட்டத் தின் அடுத்த கட்டமாக இந்தப் புதிய $50 மில்லியன் முனையம் கட்டப்படும். புதிய முனையம் திறக்கப்பட்ட தும் சிறு விமானங்கள் அந்த முனையத்திலிருந்து சேவையாற் றத் தொடங்கும்.
புதிய சிலேத்தார் விமான நிலையத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடமிருந்து 2வது) உள்ளிட்ட பல பேராளர்களும் அதில் கலந்துகொண்டு முனையத் தின் வடிவத்தைப் பார்வையிட்டனர்.

Thank you : Tamil Murasu...

நொடிகளில் வெடித்துச் சிதறிய ஐபோன் 7, ஆப்பிள் பிரியர்கள் அதிர்ச்சி


சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்றே ஆப்பிள் ஐபோன் 7 கருவியும் வெடிக்கத் துவங்கியுள்ளது. புதிதாய் வாங்கிய ஐபோன் 7 ஒரே வாரத்தில் வெடித்த சம்பவம் பாதிக்கப்பட்டவரை வியப்படையச் செய்திருக்கின்றது.

கடந்த வாரம் முழுக்கத் தென் கொரியாவின் சாம்சங் சந்தித்த அதே பிரச்சனையில் புதிய டுவிஸ்ட். இந்த வாரம் ஆப்பிள் சிக்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 வெடித்துச் சிதறியிருக்கின்றது. விலை அதிகமாக விற்கப்படும் போன்களே இப்படி வெடிப்பது அதிக விலை கொடுத்து வாங்குவோரைக் கடுப்பாக்கியுள்ளது. ஏதேதோ செய்து அதிக எதிர்பார்ப்போடு போன்களை வாங்கிச் சில நாட்களில் அவை பட்டாசு போல வெடித்தால் யார் தான் கடுப்பாக மாட்டார்கள்?

மேட் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த மேட் ஜோன்ஸ் தனது ஐபோன் 7 வெடித்ததால் கடுப்பாகியுள்ளார்.

மகிழுந்து தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது புத்தம் புதிய ஐபோன் 7 வெடித்ததைத் தொடர்ந்து தீயில் கருகிக் கொண்டிருந்த கருவியை வீடியோவாகப் பதிவு செய்திருக்கின்றார்




நிறுவனம் 
கடலில் சர்ஃபிங் செய்யப் பயணித்துக் கொண்டிருந்த ஜோன்ஸ் திரும்ப வரும் போது காரில் இருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார், இதனால் காரின் இன்டீரியர் சேதடைந்ததாக ஆஸ்திரேலியாவின் 7 நியூஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சார்ஜர் 
தான் வைத்திருந்த ஐபோன் 7 ஒரு வாரம் பழைய கருவி என்றும், கருவியைச் சார்ஜ் செய்ய ஆப்பிள் வழங்கிய சார்ஜரையே தான் பயன்படுத்தியதாக ஜோன்ஸ் 7 நியூஸ்'க்குத் தெரிவித்துள்ளார்.

ஆய்வு 
ஐபோன் 7 கருவி வெடித்திருக்கும் இச்சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன புதிய கருவிகள் வெடித்துச் சிதறும் சம்பவம் ஒன்றும் புதிய விடயம் கிடையாது. செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 7 பிளஸ் கருவி ஒன்றும் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 
ஆப்பிள் நிறுவனம் கருவி வெடித்தாலும், சாம்சங் போன்று கருவிகளைத் திரும்பப் பெறும் அளவு இப்பிரச்சனை இல்லை என்றே சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது போன்று கருவிகள் வெடிக்க லித்தியம் அயன் மூலம் தயாரிக்கப்படும் பேட்டரிகளே காரணம் ஆகும்.


சாம்சங் 
ஆப்பிள் நிறுவனம் கருவி வெடித்தாலும், சாம்சங் போன்று கருவிகளைத் திரும்பப் பெறும் அளவு இப்பிரச்சனை இல்லை என்றே சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது போன்று கருவிகள் வெடிக்க லித்தியம் அயன் மூலம் தயாரிக்கப்படும் பேட்டரிகளே காரணம் ஆகும்.

Thank you :tamil.gizbot


Friday, October 21, 2016

சவூதியில் வேலையிழந்துள்ள 1,100 இந்தியர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என அறிவிப்பு !

சவூதி அரேபியாவில் வேலையை இழந்து வறுமையில் தவித்து வரும் இந்தியர்களில் 1,100 பேர் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் நஷ்டத்தில் இயங்கியதாகக் கூறப்படும் சில தொழிற்சாலைகள் அண்மையில் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஏற்கெனவே பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களது வேலையும் பறிபோனது.
இதனால், உணவுக்கு வழியின்றி அவர்கள் பசியால் வாடி வந்தனர். இதையடுத்து, சவூதியில் வேலை இழந்த இந்தியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைப்பும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இணைந்து உணவு விநியோகிக்கும் பணிகளை மேற்கொண்டன.
இதனிடையே, வேலையை இழந்து, பிழைப்புக்கு வழி தேடி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் விளைவாக இந்தியர்கள் சிலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் சவூதி அரேபியாவுக்கு பல முறை சென்றார். தற்போதும் சவூதி சென்றுள்ள அவர், அந்நாட்டு அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சவூதியிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான விசா-வை எந்தவிதமான தடையுமின்றி இந்தியர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் திரும்புவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவில் பணிபுரிவோர்களுக்கான ஒரு பயனுள்ள தகவல்!




உங்களுடைய இகாமாவில் Fine அடிக்கப்பட்டுள்ளதா என்பதை மிக இலகுவாக சாதாரண Mobile SMS மூலம் பார்துக்கொள்ளமுடியிம்.

அதட்கு நீங்கள் செய்யவேண்டியது....
நீங்கள் ஒரு STC(sawa) பாவனையாளர் எனில்:
*56*உங்களுடைய இகாமா இலக்கத்தை டைப் செய்து 88993 எனும் இலக்கத்திட்கு SMS அனுப்பவும்.
- If you are a STC customer send SMS: *56*IQAMA NUMBER send to 88993.

நீங்கள் ஒரு Mobily பாவனையாளர் எனில்
*56*இகாமா இலக்கத்தை டைப் செய்து 625555 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
- If you are a Mobily user send SMS *56*YOUR IQAMA NUMBER sent to 625555.

நீங்கள் ஒரு Zain பாவனையாளர் எனில்;
*56*உங்களுடைய இகாமா இலலக்கத்தையிம் டைப் செய்து 709445 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
If you're a Zain customer send SMS
*56*YOUR IQAMA NUMBER send to 709445.

இதட்கான சேவை கட்டணமாக 1 ரியால் மற்றும் 50 ஹலாலா (SR1.50) அரவிடப்படும்.

பாம்பனில் பயங்கர தீவிபத்து 14 மீன் கம்பெனிகள் நாசம்

ராமேஸ்வரம் : பாம்பனில் 14 மீன் கம்பெனிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மீன் கம்பெனியில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த கம்பெனிகளுக்கு பரவியது. மீனவர்கள் கடல் நீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராமேஸ்வரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் மீனவர்கள் தனஉலகு, சந்தியா, மோட்சம், தனபால், சந்திரபோஸ், சீலன் உட்பட 14 பேரின் மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின. இவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், உபகரணங்கள், 9 டூவீலர்கள் எரிந்து சாம்பலாயின. மீன் கம்பெனிகளுக்கு அருகில் உள்ள குடிசையிலும் தீப்பற்றியது. வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மைக்கேல், இவரது மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீவிபத்து குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன், ராமேஸ்வரம் தாசில்தார் ரத்தினவள்ளி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Thank you : Dinakaran...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை : கடலூர், புதுவையில் 1-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு


புதுச்சேரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகம்பட்டி, தேவதானம்பட்டி, மேலமங்களம், மற்றும் ஆண்டிபட்டி, ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. கண்டமனூர், ராமலிங்கபுரம், வருசநாட்டிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது. 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நத்தம், வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டையிலும் நல்ல மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 


சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே நாகை மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thank you : Dinakaran...

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.




வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?

இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது. 

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன. 
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள். 
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.



என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள். 
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன் படுத்தவும். 
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.
நன்றி : விகடன்...


உடல் எடை அளவோடு இருக்க சில உணவுகள்

“உணவில் பிரச்சினை இல்லை. பசி நேரத்தில் நாம் கொரிக்கும் சில உணவுகளே உடல் எடையைக் கூட்டுகின்றன” – பெரும்பாலான சத்துணவு நிபுணர்கள் கூறுவது இதைத்தான்.
சிரமம்தான். இருப்பினும், நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் கொண்ட உணவுகள் வயிற்றை நிரப்பி, உங்கள் பசியைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இதோ அவற்றுள் சில….


1.ஆப்பிள்


பசி நேரத்தில் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், பசியை அப்படியே அடக்கிவிடும். சலிப்புத் தட்டாமல் இருக்க, ஆப்பிளின் வகையை மாற்றிக்கொண்டே இருங்கள்.

2.முட்டை

   
           
       

எந்த வேளைக்கும் பொருந்தும் உணவு முட்டை. தயாரிக்கும் நேரமும் குறைவு. புரதமும், கொழுப்பும் சேர்ந்த உணவு என்பதால், எளிதில் பசிக்காது. அவித்துச் சாப்பிடுவது மேலும் நல்லது.

3.அத்திப்பழம்


                

மிக அதிகமான நார்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்று அத்தி. அத்திப்பழத்தில் இயற்கையான இனிப்பும் உண்டு. உணவுக்கு இடையில் ஓர் அத்திப் பழத்தைச் சாப்பிட்டால், அடுத்தவேளை வரை தாக்குப் பிடிக்கும்.


4.உருளைக்கிழங்கு


           





உருளைக்கிழங்கு என்றாலே அது மாவுச்சத்து அதிகம் கொண்டது; உடல் எடையைக் கூட்டும் என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் எல்லாம் அடங்கியுள்ளது. அவித்த, வேகவைத்த, பேக் (Bake) செய்யப்பட்ட சிறு உருளை, உங்கள் அடுத்த வேளை உணவைக் கணிசமாகக் குறைக்கும்.

5.பயிறு வகைகள்

             

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் கொண்ட பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி, சோயா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவித்து சிறு அளவு எடுத்துக்கொண்டால், இரவு உணவின் அளவு பெரும்பகுதி குறைந்துவிடும்.
முயன்று பாருங்களேன்!

அல்குர்ஆனை பூஜை செய்த தொலைக்காட்சி- அப்துல்பாசித் மௌலவி கண்டனம்



அல்குர்ஆனை வைத்து திறப்பு விழாவில் பூஜை செய்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பிரபல மார்க்க பிரச்சார சொற்பொழிவளர் அப்துல் பாசித் புகாரி,
இன்று மார்க்கத்தை அதிகம் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இலங்கையின் மத சுதந்திரம் குறித்து அதிகம் நான் அறிவேன். அதற்காக அல்குர்ஆனை வைத்து பூஜை செய்யும் போது வேடிக்கை பார்த்த முஸ்லிம்கள் குறித்து கவலையடைகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் ரமழான் காலங்களில் இஸ்லாமிய போதனைகளை வழங்கும் சக்தி டி.வி இப்படியான ஒரு செய்திருப்பது ஏற்க முடியாதது. இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Thursday, October 20, 2016

மன அழுத்தத்துக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து!

இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால் அவை மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மருத்துவர்கள், ''விரக்தியாகப் பேசுதல், அளவுக்கு மீறிய கோபம், இனம் புரியாத கவலை, தூக்கமில்லாமல் இருப்பது, பசியின்மை, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, இனம் புரியாத பயம், தனிமையில் அழுவது, தேவையின்றி பதற்றமடைவது, காரணமே இல்லாமல் எப்போதும் சோகமாக இருப்பது, அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவது ஆகிய அனைத்துமே மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்'' என்று கூறியுள்ளனர்.

முக்கியமாக மன அழுத்தம் உள்ளவர்கள், தனிமையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நன்றி விகடன்..

உலகின் எந்த விமான நிலைய வை-ஃபை பாஸ்வேர்டும் இங்கே கிடைக்கும்!

அமெரிக்காவில் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருக்கிறீர்களா? அதே நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் உங்களது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய இன்டெர்நெட் இல்லையா? இதெற்கெல்லாம் உங்களுக்கு தேவை வை-ஃபை பாஸ்வேர்டு. உலகின் எந்த விமான நிலையத்தில் இருந்தாலும் வை-ஃபை பாஸ்வேர்ட் உங்களுக்கு கிடைக்கும் என்றால் உங்கள் பதில் ''மகிழ்ச்சி'' தானே...அதை தான் செய்திருக்கிறார் அனில் போலட்
அனில் போலட் ஒரு ட்ராவலர், வல பதிவாளர், கம்ப்யூட்டர் செக்யூரிட்டி இன்ஜினியர். கடந்த ஆறு வருடங்களாக உலகைச் சுற்றி வரும் இவர் ஒவ்வொரு முறையும் தனது பயணத்தின்போது விமான நிலையங்களில் வை-பை பாஸ்வேர்ட் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் என்கிறார். அதற்காக அவர் பயணித்த அனைத்து விமான நிலையங்களின் வை-பை பாஸ்வேர்டுகளை மேப்பில் தொகுத்துள்ளார்.






அதுமட்டுமின்றி தான் அடுத்து செல்ல இருக்கும் ஊர்கள் என்ன?
மற்ற யாரேனும் எந்த விமான நிலையத்தின் வை-ஃபையை பயன்படுத்தி அதன் விவரம் இதில் இல்லையென்றால் அவருக்கு அனுப்பும் வசதியையும் தந்துள்ளார். மற்றவர்கள் அளித்த விவரம் மற்றும் இவரது ஆறு வருட பயணத்தின்போது கிடைத்த அனைத்து விமான நிலையங்களின் தகவல் கீழே உள்ள மேப்பில் இருக்கிறது. இன்னும் தெற்காசிய நாடுகளை அவர் அப்டேட் செய்யவில்லை என்பதால் இந்திய விமான நிலைய விவரங்கள் இல்லை.
உலகம் சுற்றுவது தான் இவரது பொழுதுபோக்கு இன்னும் நிறைய நாடுகளின் பயணங்களில் அங்குள்ள விமான நிலையங்கள் பற்றியும், அதன் வை-பை பற்றியும் தொடர்ந்து இந்த மேப்பில் அப்டேட் செய்வேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இவர் வேலை இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை தேடலை நோக்கிய பயணம் மேற்கொள்ளும் இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இதுவரை என்பது நாடுகளின் விமான நிலையங்களுக்கு பயணித்திருக்கிறார்.

நன்றி விகடன்...

பேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்.. கிங் சல்மான் !



பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். தற்காலத்திலும் அப்படி ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வளைகுடா நாடான சவுதியில் என்ன குற்றம் செய்தாலும் இஸ்லாமிய முறைப்படித்தான் தண்டனை வழங்கப்படும். கொலைக்குப் பதில் கொலை, கையை வெட்டினால் பதிலுக்கு கை வெட்டப்படும்.
தற்போது அரேபிய அரசராக இருப்பவர் கிங் சல்மான். சவுதியில் தவித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் செய்ய உத்தரவிட்டவர். தீவிரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் அண்டை நாடுகளுக்கும் உதவி வருபவர். வளைகுடா அரசர்களில் கிங் சல்மான் சற்று வித்தியாசமான மனிதநேய மிக்க அரசராகத்தான் இதுவரைத் தெரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட தனது பேரனின் தலையை துண்டிக்க உத்தரவிட்டு, உலக மக்களை வியப்படைய வைத்துள்ளார். இத்தனை நாளும் மனித நேயமிக்க மனிதராக தெரிந்த கிங் சல்மானின் போர்க்குணத்தைக் கண்டு இப்போது சவுதி மக்களே மிரண்டு போயுள்ளனர்.
கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த கிங் சல்மான் தனது 19-வது வயதில் முதன்முறையாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். 2015-ம் ஆண்டு வரை இளவரசராகத்தான் சல்மான் இருந்தார். சல்மானின் சகோதரர் கிங் அப்துல்லா மரணமடைந்ததையடுத்து, தனது 79-வது வயதில் சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பதவியேற்றார். பதவியேற்றபோது, ''திருடியது என் மகளாக இருந்தாலும் கையை வெட்டுவேன் என்றார்கள் நபிகள். அதுபோல் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே வழியிலானத் தண்டனைதான் எனது ஆட்சியிலும் தரப்படும். எனது குடும்பத்தினரால் பொதுமக்களுக்கு தொல்லை நேர்ந்தால் சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதே தண்டனைதான் கிடைக்கும்'' என்று அறிவித்திருந்தார்.
கிங் அப்துல்லாவின் நேர்மையை சோதிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு சவுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் கபீர். நண்பருடன் ஏற்பட்டத் தகராறில் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார் கபீர். இதனைத் தொடர்ந்து கபீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதி விசாரணை நடந்தது. கிங் சல்மான் ஆட்சியில் நீதி விசாரணையில் எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை. குற்றத்துக்கான ஆதரங்கள் திரட்டப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொலைக் குற்றத்துக்கு இஸ்லாத்தில் பதிலுக்கு கொலைதான் தண்டனை என சொல்லப்பட்டுள்ளதால், அதே வழித் தண்டனை இளவரசர் கபீருக்கு வழங்கப்பட்டது.
ஆனாலும், குற்றவாளியை மன்னிக்கும் இறுதி அதிகாரம் சவுதி மன்னருக்கு உண்டு. உறவினர்கள் பலர் மன்னரிடம் முறையிட்டு, கபீரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் மன்னரிடம் எடுபடவில்லை. மன்னர் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. 'எனது பேரனாக இருந்தாலும் அல்லாஹ்வின் சட்டத்தில் சமரசம் செய்து கொள்ள எந்த இடமும் இல்லை'' எனக் கூறி தண்டனையை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத்தில் இளவரசர் கபீரின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு மன்னர் ஃபைசலை கொலை செய்த குற்றத்துக்காக இளவரசர் ஃபைசல் பின் முசைத் பொது இடத்தில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இளவரசர் பைசலின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்க 10 ஆயிரம் பேர் கூடியிருந்தததாகவும் தலை துண்டிக்கப்பட்டதும் ''காட் இஸ் கிரேட்... ஜஸ்டிஸ் டன்'' என முழக்கமிட்டதாக நியூயார்க் டைம்ஸ் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதனால், அதே பாணியில்தான் இளவரசர் கபீரின் தலையும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த புகைப்படமும் சவுதி அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பைசல் பின் முசைத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரையே கொலை செய்திருந்தார். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது பெரிய விஷயமே இல்லை. ஆனால், கபீர் கொலை செய்தவர் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லை. ஆனாலும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனையில் வேறுபாடு இருக்காது என்பதை சவுதி மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் கிங் சல்மான்.
கடந்த 1932-ம் ஆண்டும் 1953-ம் ஆண்டு வரை சவுதி அரேபியா மன்னராக இருந்தவர் அப்துல்லாஸிஸ். இவர்தான் சவுதியின் தொழில் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் வித்திட்டவர். கபீர் கிங் சல்மானுக்கு நேரடி பேரன் இல்லையென்றாலும் மறைந்த மன்னர் அப்துல்லாஸிசின் வழியில் தூரத்து உறவாகிறார்.
நீதியை நிலை நாட்டுவதில் தான் ஒரு 'கிங்' என நிரூபித்து விட்டார் கிங் சல்மான்!
நன்றி: விகடன்

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் உங்களுக்கு, உங்களுடைய நிறுவனம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர அழைப்பு No... !




சவுதி அரேபியாவில் வேலை செய்யும் உங்களுக்கு உங்களுடைய நிருவணம் தொடர்பான முறைப்பாடுகளை சவுதி தொழிலார் அமைச்சின் அவசர அழைப்பு மையத்தின் இலக்கமான 19911 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்துவன் மூலம் நிருவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியிம்.
இதனனால் நீங்கள் வேலை செய்யும் நிருவனத்திற்கு எதிராக சவுதி தொழிலார் அமைச்சு அபராதம் விதிக்கும் அதேவேளை உங்களுக்கான நட்டஈட்டினையிம் அமைச்சு பெற்றுத்தரும்.
இந்த முறைப்பாட்டு இலக்கத்திற்கு வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை நாட்கள் தவிர்த ஏனைய நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைப்பை ஏற்படுத்தி உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்ய முடியிம்.
மேலும் இந்த அவசர அழைப்பு மைய இலக்கத்தோடு அரபு, ஆங்கிலம், உருது, மலயாலம், ததகாலோக் (பிலிப்பைன்) ஆகிய மொழிகளினூடாக பேச முடியிம்
முறையிடக்கூடிய சந்தர்பங்கள் :
உங்களுடைய நிருவணம் உங்களுடைய Passport ஐ உங்களிடம் தராது வைத்திருத்தல்.
ஒப்பந்தத்திற்கு மாற்றமான வேலை ஏவுதல்.
விடுமுறை நாளில் அதாவது Day off இல் வேலைக்கு வரும்டி கட்டாயப்படுத்தல்
கட்டாய O/T செய்யிம்படி ஏவுதல்
மாத சம்பளத்தை உரிய திகதியில் தராதிருத்தல்
சம்பளம் வளங்காது நாட்களை கடத்துதல்
ஒப்பந்தத்திற்கு குறைவாக சம்பளம் வளங்குதல்
Medical/insurance/iqama இதில் ஏதாவது வழங்காமல் இருத்தல் அல்லது புதுப்பிக்காமல் விடுதல்
இது போன்ற எவ்வாறான பிரச்சினைகள் மற்றும் தொழிலார் சட்டம் தொடர்பான சந்தேகங்கள் என அனைத்திற்கும் தயங்காமல் அழைத்து உங்களுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்துங்கள்

குவைத்தில் Visa புதிப்பித்தல் செய்யும் போது இனி மருத்துவ பரிசோதனை கட்டாயம்!


Kuwait குவைத்
முக்கிய அறிவிப்பு:
குவைத்தில் Article 20 Number Visa-வில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு Visa புதிப்பித்தல் செய்யும் போது #மருத்துவ_பரிசோதனை கட்டாயம்:
இதில் சமையல்காரர்கள்,வீட்டுபணிப் பெண்கள்,ஆயாமார்கள், ஓட்டுநர்கள் ஆகியவர்கள் அடங்குவர்கள்.இவர்கள் பல தரப்பட்ட மக்களுடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் ஆவர்கள். எனவே Visa புதிப்பித்தல் செய்யும் போது மருத்துவ பரிசோதனை செய்து இவர்களுக்கு குவைத் அரசு வரையறை செய்யபட்டுள்ள தடைசெய்யப்பட்ட நோய்கள் எதுவுமே இல்லை எனபது உறுதி செய்த பிறகே Visa புதிப்பித்தல் செய்யப்படும்.
#இந்தியா #இலங்கை #பிலிப்பைன்ஸ் உட்பட 40 நாட்டு வெளிநாட்டு
தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை பாதகமாகும். 2014 முதல் தாயகம் சென்று திரும்பி குவைத் வரும் வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது.இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் Article number 17,18,22 பிரிவுகளில் குவைத் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் குடும்ப Visa-வில் தங்கியுள்ள நபர்களுக்கு வரும் நாட்களில் இந்த நடைமுறை பாதகமாகும் என்று தெரிகிறது.
இதுபோல் தற்போது உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மருத்து காப்பீட்டு திட்ட பண வரம்பு 50 KD-யில் இருந்து 130 KD ஆக உயர்த்த உள்ளதாகவும் தெரிகிறது. இதை தவிர வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என குவைத்தின் மூன்று முக்கிய இடங்களில் மருத்துவமனை மற்றும் தனி HELPLINE மையம் அமைகவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி: குவைத் தமிழ் பசங்க

ரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்!

ஸ்மார்ட்போன் கருவிகளைத் தவிர வீட்டு உபயோக பொருட்களான எம்ஐஏர் பியூரிஃபையர், எம்ஐ பாக்ஸ் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இதர கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக சியோமி விளங்குகின்றது. இந்தியாவில் அதிவேகமாக முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் சியோமி நிறுவனம் விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது.
தற்சயம் சியோமி நிறுவனத்தின் புதிய கருவி சார்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன்இயக்கப்படுவது தெளிவாக பதிவியாகியுள்ளது.

யுகு

வளையும் திரை கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ஒன்றினை பயனர் தன் கையில் வைத்து இயக்கும் வீடியோ யுகு எனும் சீன இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருவியானது MIUI சார்ந்த யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகின்றது.


அம்சங்கள்

வீடியோவில் பயனர் கருவியினை சீராக பயன்படுத்துவது தெளிவாக தெரிகின்றது. மேலும் கேம் ஒன்றையும் விளையாடுவது கருவி சார்ந்த எதிர்பார்ப்பினை எகிறச் செய்கின்றது.

வளைந்த டிஸ்ப்ளே

தொழில்நுட்ப சந்தையைப் பொருத்த வரை வளைந்த டிஸ்ப்ளேக்கள் சில காலமாக நமக்கு அறிமுகமான ஒன்றாகவே இருக்கின்றது. நோக்கியா நிறுவனத்தின் மார்ஃப் கான்செப்ட் 2008 ஆம் ஆண்டிலேயே வளைந்த டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.



சோனி

இதன் பின் சோனி மற்றும் சாம்சங் என பல்வேறு நிறுவனங்களும் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் கருவிகளை அறிமுகம் செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்த போதும் அதிகாரப்பூர்வமாகச் சந்தையில் இத்தொழில்நுட்பம் வெளியிடப்படவில்லை.



எல்ஜி

இதே போல் எல்ஜி நிறுவனமும் ரூ.11,768 கோடி வரை வளைந்த டிஸ்ப்ளேக்களை தயாரிக்க முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் வளைந்த டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதையே பிரதிபலிக்கின்றது.


சாம்சங்

மேலும் சாம்சங் நிறுவனமும் வளைந்த டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட கருவிகளை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகின்றது.

சியோமி

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைப் பொருத்த வரை சியோமி நிறுவனம் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றது என்றாலும், அந்நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைத் தயாரித்து வருவது தற்சமயம் உறுதியாகியுள்ளது.

Jobs in Singapore

Jobs in Singapore    𝙎𝙞𝙣𝙜𝙖𝙥𝙤𝙧𝙚 𝙉𝙚𝙬 𝙍𝙚𝙦𝙪𝙞𝙧𝙚𝙢𝙚𝙣𝙩𝙨 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 +91 9779259557\ 𝐍𝐀𝐌𝐄 - 𝐀𝐊𝐁𝐀𝐑 𝐊𝐇𝐀𝐍 𝐖𝐇...